follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்தடுப்பூசிக்கு எதிர்ப்பு - நியூசிலாந்திலும் போராட்டம்

தடுப்பூசிக்கு எதிர்ப்பு – நியூசிலாந்திலும் போராட்டம்

Published on

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூசிலாந்திலும் லொறிச் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடாவில் எல்லை கடந்து செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டோவாவில் லொறிகளுடன் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் ஒட்டோவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கொரோனா பாதிப்பு அதிரிகரிப்பு காரணமாக அந்நாட்டு பிரதமர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நியூசிலாந்தில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லொறிச் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் வெலிங்டனில் லொறிகள் மற்றும் கார்களில் அணிவகுத்து பாராளுமன்றம் அமைந்துள்ள வீதியை முற்றுகையிட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...