follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுகௌரவ பிரதமர் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்

கௌரவ பிரதமர் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்

Published on

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜய ஸ்ரீ மஹாபோதியில் இன்று வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
முதலில் அடமஸ்தானாதிபதி, கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறி நிவாச தலைமை தேரரை சந்தித்து அவரிடம் நலன் விசாரித்தார்.
கௌரவ பிரதமர் அவர்கள் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து, ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரை சந்தித்தார்.
அங்கு கௌரவ பிரதமர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரின் நலன் விசாரித்து கலந்துரையாடினார்.
இவ்வழிபாட்டு நிகழ்வில் கௌரவ பிரதமருடன் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...