follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை

Published on

ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு சில விடயங்களை தௌிவு படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்ப விரும்புவதாயின், அவர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்காக சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சு தற்போது செயற்பட்டு வருகின்றது.

ஹோட்டலில் இருந்து செயற்படுகின்ற காபூலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தற்போது இலங்கைப் பிரஜைகள் யாரும் இல்லை என்பதுடன், அது உள்ளூர் பணியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் உள்ள 43 இலங்கைப் பிரஜைகளின் விபரங்கள் தூதரகத்தில் காணப்படுகின்ற அதே நேரத்தில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும் சில விவரங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலை குறித்து விளக்கமளிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு தயாராக இருக்கின்ற அதே வேளை, இலங்கைப் பிரஜைகள் நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்பினால், அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும். என வெளிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

350 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சுகாதார...

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General...

முன்னாள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரையும்...