follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுமக்கள் விடுதலை முன்னணி ஏற்படுத்திய கலவரங்களினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் - நாமல்

மக்கள் விடுதலை முன்னணி ஏற்படுத்திய கலவரங்களினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் – நாமல்

Published on

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற ஆளும்கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கை என நாமல் ராஜபக்ஷ சாடினார்.

இந்த விடயத்தில் தமிழிழ விடுதலை புலிகளுக்கும்,மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பகாலத்தில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய கலவரங்களில் ஈடுப்பட்டமையினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டதை மக்கள் இன்றும் மறக்கவில்லை என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...