follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் – உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பால் யுத்த பதற்றம் அதிகரிப்பு

மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் – உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பால் யுத்த பதற்றம் அதிகரிப்பு

Published on

ரஷ்யா, தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் இராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.

இதையடுத்து, அமெரிக்கா கீவ் உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் உள்ள தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டது.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோபிடன் உத்தரவின் பேரில் 3000 அமெரிக்க இராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா படைகளும் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன.

இதனால், 3 ஆம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...