follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுபெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாது!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாது!

Published on

இலங்கை மத்திய வங்கியின் உத்தரவையடுத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாதென அரசாங்க வங்கிகள் அறிவித்துள்ளமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே 75,000 கோடி ரூபா கடன் சுமையுடன் இருப்பதனால் அதற்கு மேலதிமாக கடன் வழங்க முடியாது என மக்கள் மற்றும் இலங்கை வங்கிகள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே அரச வங்கிகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 37,000 கோடி ரூபா செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலும் 1036 கோடி ரூபா கடன் கோரிய போதிலும் அந்த கோரிக்கையை அரச வங்கிகள் நிராகரித்துள்ளன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மொத்தமாக 11000 கோடி ரூபா நட்டமடைந்துள்ளதாகவும், நாளாந்தம் 55 கோடி ரூபா நட்டமடைவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...