follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்

Published on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பனத்தை ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் சபையில் முன்வைக்கவுள்ள அதே வேளையில், மார்ச் 03ஆம் திகதி இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடல் அமர்வொன்றும் இடம்பெறவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வழிநடாத்தவுள்ளார். இந்த விஜயத்தின் போது, பேரவையின் 49ஆவது அமர்வின் உயர்மட்டப் பிரிவில் உரையாற்றவுள்ள வெளிநாட்டு அமைச்சர், அதன் பின்னர் இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் உரையாற்றுவார். இந்த விஜயத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...