நாடாளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானம்

382

தற்போதைய கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பணிக்குழாம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழாமினர் ஆகியோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அவசியமானவர்கள் மதியம் 12.30 வரையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் பங்கேற்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here