follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடு225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மாத்திரமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மாத்திரமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்

Published on

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2021 பெப்பரி 16 ஆம் திகதி தொடங்கியது. எனினும் இப்போது வரை 146 எம்.பி.க்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 122 எம்.பி.க்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இந்தியாவின் ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

பாராளுமன்றத்தில் உள்ள சுகாதார மையத்தில் 24 எம்.பிக்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

இதுவரை கொவிட் -19 க்கு தடுப்பூசி போடாத எம்.பி.க்களின் விவரங்கள் மற்றும் காரணம் எங்களிடம் இல்லை என்று தகவல் அதிகாரியும் பாராளுமன்ற உதவி பொதுச்செயலாளருமான டிக்கிரி கே. ஜயதிலக கூறினார்.

இதேவேளை கடந்த 14 நாட்களில் ஐந்து எம்.பிக்களுக்கு கொவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...