follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவையில் கடும் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவையில் கடும் பாதிப்பு

Published on

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் மாகாணங்களுக்கு இடையிலான 250 தனியார் பஸ்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக  தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்தார்.

பஸ் ஒரு இடத்துக்கு வந்தாலும் மற்றைய இடத்திற்குச் செல்வதற்கு எரிபொருள் இல்லாத நேரங்களும் உண்டு என விஜித குமார தெரிவித்தார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக பஸ்களின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் இதனால் பயணிகள் மட்டுமின்றி பஸ் உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ்கள் சுமார் 3,200 இருந்தாலும், அவற்றில் சுமார் 2,000 பஸ்கள் மட்டுமே தற்போது இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலை தொடருமானால் பஸ்களை இயக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...