follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1முழு முடக்கத்திற்குத் தயாராகும் அரசாங்கம்? விரைவில் தீர்மானம்

முழு முடக்கத்திற்குத் தயாராகும் அரசாங்கம்? விரைவில் தீர்மானம்

Published on

கொரோனா, டெல்ட்டா வைரஸ் பரவலின் தீவிரத்தால் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள அரசாங்கம், முழு முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

வார இறுதியில் இந்த முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், எனினும், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு இடைவேளை சகிதம் இதனை அமுல்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமுடக்கம் முடக்கம் அமுல்படுத்தப்படும் போது அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் பீதி கொள்ளத் தேவையில்லை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பணம், பொருள் செலவுகளை சிக்கனமாக கையாளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...