follow the truth

follow the truth

July, 11, 2025
Homeஉள்நாடுகர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

Published on

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கில், தடுப்பூசி செலுத்தல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கர்ப்பிணித் தாய்மார்கள், தாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கோ அல்லது தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கோ சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கர்ப்பிணித் தாய்மார்கள், 23 ஆம் திகதிவரை காத்திருக்காமல், தங்களது பிரதேசத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு சென்று அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு, குடும்பநல சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலூட்டும் தாய்மார், தடுப்பூசி செலுத்திக்கொள்ள எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால், தாய்க்கும், சேய்க்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

அத்துடன், தாய்மார்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட உடனேயும் குழந்தைக்கு பாலூட்ட முடியும்.
தாய்ப்பாலூட்டலுக்கும், தடுப்பூசி ஏற்றத்திற்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை.

தாயொருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலும், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய, குழந்தைக்கு பாலூட்ட முடியும் என்றும் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...