காபுல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டது

1120

குழப்பநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறுவதற்கு முயற்சித்ததை அடுத்து, விமான நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம், நேற்று மீள திறக்கப்பட்டதாக அமெரிக்க ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு தரப்பினர் அங்கு நிலைகொண்டுள்ளதுடன், மேலும் ஒரு தொகுதியினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அமெரிக்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here