follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉலகம்காபுல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டது

காபுல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டது

Published on

குழப்பநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறுவதற்கு முயற்சித்ததை அடுத்து, விமான நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம், நேற்று மீள திறக்கப்பட்டதாக அமெரிக்க ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு தரப்பினர் அங்கு நிலைகொண்டுள்ளதுடன், மேலும் ஒரு தொகுதியினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அமெரிக்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாபின்...

ஹமாஸ் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் – எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல்...

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக்...