7 புகையிரத நிலையங்களுக்கு பூட்டு

710

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 07 புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை புகையிரத நிலையங்களே மூடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​புகையிரத சேவை துணைத் துறையின் கீழ் உள்ள ஊழியர்களில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் 38 பேர் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், 12 கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 52 ஊழியர்கள் எனகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here