follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகொரோனா தடுப்பூசி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அக்மீமன தேரர் முறைப்பாடு

கொரோனா தடுப்பூசி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அக்மீமன தேரர் முறைப்பாடு

Published on

கொரோனா தடுப்பூசி ‍வேலைத்திட்டத்துக்கு அமைவாக பலாத்காரமாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்று சிங்கள ராவய கட்சித் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரரினால் இன்று  கையளிக்கப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில்,

“கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும்படி அரசாங்கம் கட்டாயப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். தடுப்பூசி ஏற்றாதவர்கள் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடையென அரசாங்கம் எவ்வாறு கூற முடியும். ‍இந்த தடுப்பூசிகளுக்கு உத்தரவாதம் உள்ளதா?

இதனை ஏற்றிக்கொள்வதால் வைரஸ் தொற்று ஏற்படாதெனவும் மரணிக்கமாட்டார்கள் எனவும் உத்தரவாதம் உள்ளதா?

ஆகவே, கொரோனா தடுப்பூசி ‍வேலைத்திட்டத்துக்கு அமைவாக பலாத்காரமாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் எமது குழுவுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை கையளித்தோம்”என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...