follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்கீவ் நகரில் ஊரடங்கு : உக்ரைனுக்கு உலக வங்கியின் அறிவிப்பு

கீவ் நகரில் ஊரடங்கு : உக்ரைனுக்கு உலக வங்கியின் அறிவிப்பு

Published on

ரஷ்யாவின் படையெடுப்பால் கடும் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தில் உக்ரைனுக்கு உலக வங்கி முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் காரணமாக பொது போக்குவரத்து இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மெட்ரோ நிலையங்களை தங்குமிடங்களாக பொது மக்கள் 24 மணிநேரமும் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...