follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபுதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்

புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்

Published on

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
  1. இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் – காலித் நசார் சுலைமான் அல்அமெரி (Khaled Nasser Sulaiman Al Ameri)
  2. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் (Julie Jiyoon Chung)
  3. இலங்கைக்கான லிபியாவின் தூதுவர் நாசர் அல்ஃபுர்ஜானி (Nasser Alfurjani)

பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதான கூட்டமைப்பு அதிகாரி செனரத் திஸாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...