follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுபுறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

Published on

நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் மையமாக புறக்கோட்டை மொத்த வியாபார சந்தை செயற்படுகின்றது.

இறக்குமதிகள் நிறுத்தப்படுவதாலும் துறைமுக சேவைகள் இடைநிறுத்தப்படுவதாலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேங்கியிருக்கும் சூழல் உருவாகும்.

இதனால், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து அதன் விலைகள் சடுதியாக உயர்வடையும் நிலையும் ஏற்படும்.

எனவே அத்தியாவசிய சேவைகள் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.

விருப்பத்தின் அடிப்படையில் எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறந்திருக்க வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...