follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபுறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

Published on

நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் மையமாக புறக்கோட்டை மொத்த வியாபார சந்தை செயற்படுகின்றது.

இறக்குமதிகள் நிறுத்தப்படுவதாலும் துறைமுக சேவைகள் இடைநிறுத்தப்படுவதாலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேங்கியிருக்கும் சூழல் உருவாகும்.

இதனால், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து அதன் விலைகள் சடுதியாக உயர்வடையும் நிலையும் ஏற்படும்.

எனவே அத்தியாவசிய சேவைகள் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.

விருப்பத்தின் அடிப்படையில் எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறந்திருக்க வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...