follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉள்நாடுபுறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

Published on

நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் மையமாக புறக்கோட்டை மொத்த வியாபார சந்தை செயற்படுகின்றது.

இறக்குமதிகள் நிறுத்தப்படுவதாலும் துறைமுக சேவைகள் இடைநிறுத்தப்படுவதாலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேங்கியிருக்கும் சூழல் உருவாகும்.

இதனால், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து அதன் விலைகள் சடுதியாக உயர்வடையும் நிலையும் ஏற்படும்.

எனவே அத்தியாவசிய சேவைகள் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.

விருப்பத்தின் அடிப்படையில் எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறந்திருக்க வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...