இவ் வருட இறுதி வரை அனைத்து சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நிர்ணய விலைகளில் அரிசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கும்,
ஒரு கிலோ நாட்டு மற்றும் பச்சை அரிசி 105 ரூபாவிற்கும்
விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ள போதிலும் இந்த வருட இறுதி வரை இந்த மூன்று அரிசிகளையும் ச.தொ.ச விற்பனை நிலையங்களில் குறித்த விலைகளில் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.