follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்தலிபான்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கம்

தலிபான்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கம்

Published on

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கணக்களை நீக்குவதற்கு நேற்று பேஸ்புக் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தநிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் மற்றுமொரு நிறுவனமான வட்ஸ் எப்’ பிலும் குறித்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானில் ட்விட்டர் தொடர்ந்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிலைமை மாறிவருவதன் காரணமாக பொதுமக்கள் ட்விட்டர் மூலம் உதவிகளை கோரிவருவதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், நன்மைக்கும் முக்கியத்தும் அளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் ட்விட்டர் சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...