follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்தலிபான்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கம்

தலிபான்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கம்

Published on

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கணக்களை நீக்குவதற்கு நேற்று பேஸ்புக் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தநிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் மற்றுமொரு நிறுவனமான வட்ஸ் எப்’ பிலும் குறித்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானில் ட்விட்டர் தொடர்ந்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிலைமை மாறிவருவதன் காரணமாக பொதுமக்கள் ட்விட்டர் மூலம் உதவிகளை கோரிவருவதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், நன்மைக்கும் முக்கியத்தும் அளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் ட்விட்டர் சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...