follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP13 வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்க 10 பங்காளி கட்சிகள் கோரிக்கை

3 வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்க 10 பங்காளி கட்சிகள் கோரிக்கை

Published on

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள்இ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளன.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால்இ கொரோனா நோயாளர் எண்ணிக்கை வைத்தியசாலை நிரம்பி வழியும். இதனால் வைத்தியசாலை கட்டமைப்பு உடையக்கூடும் என குறித்த 10 கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரர்,
ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணாயக்கார,
லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச,
பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில,
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா,
எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ்,
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜீ. வீரசிங்க,
ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன,
யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குவதன் மூலம் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறையும் என இந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால்இ தனிமைப்படுத்தப்பட்டஇ நோயாளர்களின் அச்சத்தால் நாடு செயற்றிறனை இழக்கும் அபாயம் உள்ளதென ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம்இ மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாட்டையும் மேம்படுத்த முடியும் என அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...