follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும்

Published on

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

மேலும் உயர்தர பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை கொண்டு செல்லும்போது எரிபொருள் இன்மையால் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டதாக கூறினார்.

இருப்பினும் பொலிஸாரின் உதவியுடன் அதனை முகாமைத்துவம் செய்ய முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

இதேவேளை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 7 பாடசாலைகள் (கொழும்பு ரோயல், கேகாலை வித்தியாலயம், கண்டி – கிங்ஸ்வூட், கண்டி – சீதாதேவி, காலி – வித்தியாலோக, பதுளை ஊவா மகா வித்தியாலயம், இரத்தினபுரி பெண்கள் கல்லூரி) மாத்திரம் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...