follow the truth

follow the truth

August, 25, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி - சுதந்திரக் கட்சியினருக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதி – சுதந்திரக் கட்சியினருக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னதாக முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதோடு அவர்களில் 2 அமைச்சர்களும் 3 இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

இந்தநிலையில் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தற்போதைக்கு அரசாங்கத்திலிருந்து விலகும் தீர்மானம் இல்லை என்று குறிப்பிட்டார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கின்ற சில கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...