follow the truth

follow the truth

July, 2, 2025
HomeUncategorizedடீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!

டீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!

Published on

டீசல் தட்டுப்பாடு காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, பெல்மதுளை, இறக்வான, குருவிட, எஹலியகொடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் பாரிய குழிகளில் நீரினை அகற்றுவது மிக அவசியமாகவுள்ளதாக இப்பணிகளில் ஈடுபடுவோர் சுட்டிக் காட்டினர்.

இந்த நிலை காரணமாக இரத்தினபுரியில் பல பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோரின் நீர் இறைக்கும் இயந்திரங்களுக்காவது டீசலினை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...