follow the truth

follow the truth

May, 3, 2025
HomeUncategorizedடீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!

டீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!

Published on

டீசல் தட்டுப்பாடு காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, பெல்மதுளை, இறக்வான, குருவிட, எஹலியகொடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் பாரிய குழிகளில் நீரினை அகற்றுவது மிக அவசியமாகவுள்ளதாக இப்பணிகளில் ஈடுபடுவோர் சுட்டிக் காட்டினர்.

இந்த நிலை காரணமாக இரத்தினபுரியில் பல பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோரின் நீர் இறைக்கும் இயந்திரங்களுக்காவது டீசலினை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...