follow the truth

follow the truth

June, 16, 2025
Homeவிளையாட்டுஇலங்கை வர ஆப்கானிஸ்தான் அணிக்கு அனுமதி : கபூலில் பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை வர ஆப்கானிஸ்தான் அணிக்கு அனுமதி : கபூலில் பயிற்சிகள் ஆரம்பம்

Published on

இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கு தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் விளையாடுவதில் தமக்கு எந்த வித ஆட்சேபனைகளும் இல்லையென தலிபான்கள் தெரிவித்துள்ளதாக பகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியை அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் காபூலில் தமது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்,

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் லாகூரில் பயிற்சி முகாம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியுடன் 29 ஆம் திகதி இலங்கைக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...

உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதி போட்டி இன்று அரம்பம்

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இன்று...