follow the truth

follow the truth

February, 12, 2025
HomeTOP1முடக்கம் குறித்த தீர்மானம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்

முடக்கம் குறித்த தீர்மானம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்

Published on

தீவிரமாக பரவி வரும் கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதற்கு செவிசாய்ப்பதாக கூட்டம் முடிந்து வெளியேவந்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாட்டை குறைந்தது 10 நாட்களுக்கு முடக்குமாறு அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எனினும், எத்தனை நாட்களுக்கு நாடு முடக்கப்படும் என்பது குறித்து ஜனாதிபதி அறிவிப்பார் என்றும் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்

2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர...

குருநாகல் விபத்து- 02 பேருந்துகளின் சேவைகள் இடைநிறுத்தம்

குருநாகல், தொரயாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துகளின் சேவைகளை இடைநிறுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண...