follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Published on

டீசல் விநியோகத்தினால் கூட்டுத்தாபனம் எதிர்க்கொள்ளும் நட்டத்தை ஈடுசெய்ய வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விற்பனை விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.

இருப்பினும்நெருக்கடியான சூழ்நிலையிலேயே தற்போது ஒரு லீற்றரின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு வலுசக்தி அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,

விருப்பமில்லாத நிலையில் தான் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தது.ஐ.ஓ.சி நிறுவனம் இவ்வருடத்தில்மாத்திரம் மூன்று முறை எரிபொருளின் விலையை அதிகரித்தது.

எரிபொருள் இறக்குமதி நெருக்கடி மறுபுறம் சிபெட்கோ எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட அதிகரித்த கேள்வி ஆகியவற்றை கருத்திற்கொண்டு எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டது.

ஒரு லீற்றர் டீசல் விநியோகத்தின் ஊடாக 120 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்கிறோம்.தற்போது 55 ருபாவினால் தான் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசல் விநியோகத்தினால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் மேலும் அதிகரிக்க வேண்டும்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எம்மால் நன்கு உணர முடிகிறது.

விலை அதிகரிக்காமல் பழைய விலைக்கமைய எரிபொருளை விநியோகித்தால் கூட்டுத்தாபனம் ஒவ்வொரு மாதமும் 2,600 கோடி நட்டத்தை எதிர்க்கொண்டிருக்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் போதும்,விலை குறைவடையும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையினை மறுசீரமைக்க எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு வலுசக்தி அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...