மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றை உடைத்து 71 நவீன ரக கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் நால்வர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் சுமார் 2, 444 500 ரூபாய் பெறுமதியுடைய கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து 23 கையடக்கத்தொலைபேசிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் 19, 32, 47, 50 வயதுகளையுடைய அக்கரைப்பற்று மற்றும் வரீப்பத்தான்சேனை பிரதேசங்களைச்சேர்ந்தவர்களாவர். காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.