follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாலிகார்பனேட்டினால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாத போதிலும், அவ்வாறான பொருட்கள் சந்தையில் இருப்பதாகவும், அதற்கான வசதிகள் இலங்கை தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு திரவ உணவு வழங்குவதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை இறக்குமதி செய்ய பதினெட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் அந்த நிறுவனங்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அனுமதிப்பார் எனவும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் உற்பத்திகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...