follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Published on

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது முதலாவது போலியான கருத்தாகும்.

அதேபோல், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரொன் கொவிட் திரிபானது பலவீனமான வைரஸ் திரிபாகும் என்பது மற்றைய போலியான கருத்தாகும்.

மேலும் இந்த கொவிட் திரிபானது கடைசி கொவிட் திரிபாகும் என்பது மற்றுமொரு போலியான கருத்தாகும்.இது போன்ற தவறான கருத்துகள் உலகவாழ் மக்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கொவிட் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொவிட் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்வாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...