follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதீவிரவாதம், மத அடிப்படைவாதத்தில் இருந்து BIMSTEC நாடுகளை பாதுகாக்க வேண்டும்- ஜனாதிபதி

தீவிரவாதம், மத அடிப்படைவாதத்தில் இருந்து BIMSTEC நாடுகளை பாதுகாக்க வேண்டும்- ஜனாதிபதி

Published on

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை உரையாற்றினார்.

இதன்போது, மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விடயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், வங்காள விரிகுடா பிராந்தியங்களின் பொருளாதாரம் பூலோக பொருளாதாரத்துக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம்  கொழும்பில் கலப்பு முறையில் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான  வங்காள விரிகுடா முன்முயற்சியின் பிம்ஸ்டெக் 5ஆவது உச்சி மாநாட்டை நடத்துகிறது.

இலங்கை ஜனாதிபதி தலைமை தாங்கும் இந்த உச்சி மாநாடு, இன்றுடன் 3 நாட்களாக நடைபெறுகிறது.

இதில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் முறையில் பங்கேற்றுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...