follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுகட்டணம் செலுத்தாததால் டீசலுடன் 7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

கட்டணம் செலுத்தாததால் டீசலுடன் 7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

Published on

37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.

இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

எவ்வாறாயினும், 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்துள்ள சிங்கப்பூரின் விடோல் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலுக்கு செலுத்த வேண்டிய 52 மில்லியன் டொலர் நேற்று மாலை வரை செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இன்றுடன் 7 நாட்களாக அந்த கப்பல் சர்வதேச கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை- இந்திய ஒயில் நிறுவனம் 6000 மெட்ரிக் தொன் டீசலை மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொடுக்க நேற்று இணக்கம் தெரிவித்தது.

திருகோணமலையிலுள்ள லங்கா IOC களஞ்சியசாலையிலிருந்து இந்த டீசல் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...