விரும்பிய தடுப்பூசிகளை கோருவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

326

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.

அதன்படி, பல நாடுகள் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டினதோ அல்லது நிறுவனத்தினதோ தடுப்பூசிகளை பெறவேண்டுமென கட்டாயமாக்கவில்லை.

ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களது உள்நோக்கத்திற்காக இவ்வாறு தடுப்பூசிகளை வகைப்படுத்திப் பார்க்கின்றன.

அந்தவகையில் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கோருபவர்கள் இந்த விடயத்தினை கவனத்திற்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here