follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுசுயாதீன உறுப்பினர்களுடன் இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

சுயாதீன உறுப்பினர்களுடன் இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

Published on

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஏழு உறுப்பினர்களுடன், இலங்கைக்கான சீன தூதுவர் ஸி சென்ஹொங் நேற்று (22) சந்தித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, உதய கம்மன்பில, அத்துரலிய ரதன தேரர், தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷண யாபா உள்ளிட்ட ஏழு பேர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய முறையை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...