follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஅஜித் ரோஹண குறித்து வெளியாகிய புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம்

அஜித் ரோஹண குறித்து வெளியாகிய புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம்

Published on

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படத்தில் இருப்பது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இல்லையெனவும், அது வேறு ஒருவரது புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது TilTok செயலியில் இருந்து பெறப்பட்ட புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...