follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1சிலாபத்தில் குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

சிலாபத்தில் குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Published on

சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார்

மையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசியை வழங்கியதாகவும் இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான மக்கள் நேற்று தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயுள்ளது

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் நேற்று ஒரு வைத்தியரின் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப சுகாதார சேவைகள் பிரிவின் பெண் ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்;கள் குழு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...