follow the truth

follow the truth

August, 25, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Published on

பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டம் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியினை ஆரம்பித்த மாணவர்கள் பாராளுமன்றத்தின் நுழைவுப் பகுதியான பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்பின்னர், அங்கு கூடாரங்களை அமைத்து மாணவர்கள் தங்கியிருந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்

அத்துடன் மாணவர்கள் காவல்துறையின் தடைகளை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது, அதனை தடுப்பதற்காக பொலிஸாரால் அவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரம், பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பிற்போடப்பட்ட நிலையில், மாணவர்களும் தங்களது போராட்டத்தினை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் தற்காலிமாக கைவிட தீர்மானித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...