பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோகம் நாளை முதல் ஆரம்பம்

531

இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோகம் நாளை (13) ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோக பணிகள் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்,

´´பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிச் சீட்டு நாளை முதல் விநியோகிக்கப்படும். ஊரங்கு சட்டம் நாட்டில் பிறப்பிக்கப்பட்டமையால் கடந்த சில தினங்களாக அனுமதிச் சீட்டு விநியோகத்தில் தாமத நிலை ஏற்பட்டது.

எனினும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவை கிடைக்கும் என நம்புகிறோம். இல்லை என்றால் திங்கட்கிழமைக்குள் சகல நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்´´ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here