follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுமன்னாரில் காணாமல்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

மன்னாரில் காணாமல்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

Published on

மன்னார் – செளத்பார் பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்ற நிலையில் காணாமற்போன மீனவர் இன்று(14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எமில்நகரை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மீனவரே நேற்று(13) காலை மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயிருந்தார்.

களப்பில் இறங்கி மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞரே நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தார்.

உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்று முதல் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே, இன்று(14)காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...