ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து, சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கான தெரிவு அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.