follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுவன்முறைகள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது

வன்முறைகள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது

Published on

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 43 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் மேலும் பலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

வன்முறைகள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள 791 முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள், மேல் மாகாண பொலிஸ் நிலையங்கலுக்கே கிடைத்துள்ளதாக கூறும் பொலிஸார் மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 444 என தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையின் படி, ஜூன் 2025-இல்...

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...