follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1இலங்கை- நேபாளத்துக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கை- நேபாளத்துக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

Published on

இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி,  ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு- கத்மாண்டுவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் என நேபாளத்துக்கான இலங்கை தூதுவர் ஹிமாலீ அருணதிலக, தனது டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.

குறித்த விமான சேவையின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்பதுடன் இரு நாடுகளுக்கிடையில் மக்கள் தொடர்பும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் காத்மாண்டு- கொழும்புக்கு இடையிலான வழக்கமான நேரடி விமானங்களை, அப்போதைய ரோயல் நேபால் ஏயர்லைன்ஸ் இயக்கி வந்தது.

ஆனாலும் விமானங்கள் வணிக ரீதியாக சாத்தியமில்லை என்பதனால் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...