follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1இலங்கை- நேபாளத்துக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கை- நேபாளத்துக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

Published on

இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி,  ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு- கத்மாண்டுவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் என நேபாளத்துக்கான இலங்கை தூதுவர் ஹிமாலீ அருணதிலக, தனது டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.

குறித்த விமான சேவையின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்பதுடன் இரு நாடுகளுக்கிடையில் மக்கள் தொடர்பும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் காத்மாண்டு- கொழும்புக்கு இடையிலான வழக்கமான நேரடி விமானங்களை, அப்போதைய ரோயல் நேபால் ஏயர்லைன்ஸ் இயக்கி வந்தது.

ஆனாலும் விமானங்கள் வணிக ரீதியாக சாத்தியமில்லை என்பதனால் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...