follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுகோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும்

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கூறுகிறார்கள். அந்த பிரச்சினை தீர்ந்தால் அடுத்த பிரச்சினை என்னவாக இருக்கும்? அவர் இராஜினாமா செய்தால் அடுத்து, என்ன நடக்கும்?

அடுத்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கே பெரும்பான்மை பலம் உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை பசில் ராஜபக்ஷவே கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

எனவே, தற்போதைய ஜனாதிபதி பதவி விலகினால் பசில் ராஜபக்ஷவே ஜனாதிபதியாக முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...