ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – ரமேஷ் பத்திரன

972

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பிலோ நீக்குவது தொடர்பிலோ எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களின்படி அரசாங்கம் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, நாட்டு மக்களின் பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here