follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஊரடங்கை நீடிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை - ரமேஷ் பத்திரன

ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – ரமேஷ் பத்திரன

Published on

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பிலோ நீக்குவது தொடர்பிலோ எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களின்படி அரசாங்கம் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, நாட்டு மக்களின் பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...