follow the truth

follow the truth

September, 2, 2025
Homeஉள்நாடுஊரடங்கை நீடிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை - ரமேஷ் பத்திரன

ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – ரமேஷ் பத்திரன

Published on

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பிலோ நீக்குவது தொடர்பிலோ எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களின்படி அரசாங்கம் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, நாட்டு மக்களின் பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...