follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடு20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4ஆவது தடுப்பூசி!

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4ஆவது தடுப்பூசி!

Published on

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான நான்காவது டோஸை இன்று முதல்  தடுப்பூசி மையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் டினு குருகே கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசியைப் பெறத் தகுதியுடையவர்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மூன்றாவது தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் முடிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் தங்களின் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி டோஸ்களை காலை 9:00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பெறுவதற்காக புதிய பஸார் மகப்பேறு இல்லம், டீன்ஸ் வீதியில் உள்ள MOH அலுவலகம் மற்றும் வெள்ளவத்தையில் உள்ள MOH அலுவலகம் ஆகியவற்றிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்தோடு, இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விஹார மகாதேவி பூங்காவில் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் நான்காவது டோஸ் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாட்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...