follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுமதத்தலைவர்கள் கொலைகளை தடுக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை! - மஹிந்த ராஜபக்ச

மதத்தலைவர்கள் கொலைகளை தடுக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை! – மஹிந்த ராஜபக்ச

Published on

அமரகீர்த்தி அதுகோரல எம்.பியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இந்த பாராளுமன்றத்தின் எம்.பிக்கள் மரண அச்சத்துடனேயே வீதியில் செல்கின்றனர் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல தொடர்பான அனுதாப பிரேரணை மீது பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துதெரிவித்த அவர் பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வேதனை மற்றும் அதிருப்தி நிலைமை உருவாகியுள்ளது என்பது உண்மையே! ஆனால் அது கொலை, வீடுகளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் வரையில் செல்வதற்கு காரணம் இதன் பின்னால் இருந்து சிலர் செயற்படுவதனாலேயே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அன்று போராட்டக் களத்தில் இருந்த மதத் தலைவர்கள் கூட இந்த கொலைகளை தடுக்க முயற்சிக்கவில்லை. அதனை கண்டிக்கவும் இல்லை. இதனை கூறுவதற்கும் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...