follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி – ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி – ரணில்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி செய்யும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் Antony Blinken தொலைபேசியில் உரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து தான் இதன்போது விளக்கமளித்ததாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் Anthony Blinken ஒப்புக்கொண்டார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று (10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...