follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து பிரதமர் கருத்து!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து பிரதமர் கருத்து!

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தேச வேலைத்திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (20) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில், இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

இம்மாதம் 30ஆம் திகதி வரை இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...