follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து பிரதமர் கருத்து!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து பிரதமர் கருத்து!

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தேச வேலைத்திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (20) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில், இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

இம்மாதம் 30ஆம் திகதி வரை இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...