follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநாட்டை கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்! - ரணில்

நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்! – ரணில்

Published on

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும், மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தி, இன்னும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டால் மாத்திரமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும், உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை அடைந்ததும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும் மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...