follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாட்டை கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்! - ரணில்

நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்! – ரணில்

Published on

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும், மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தி, இன்னும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டால் மாத்திரமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும், உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை அடைந்ததும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும் மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...