எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து, பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
இதன்படி, பஸ் கட்டணத்தை 35 முதல் 40 வீதத்தால் அதிகரிக்குமாறு அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விலை அதிகரிப்பானது, நாளை முதல் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புதிய விலை திருத்தத்தின் பிரகாரம், ஆகக் குறைந்த கட்டணமாக 40 ரூபா நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.